செம்மரக் கடத்தல் விவகாரத்தில் பா.ம.க. பிரமுகர் கொலை? 4 போலீசார் கைது… டி.எஸ்.பி.க்கு வலை!
வேலூர்: செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்பு இருப்பதாகக் கூறி ஆம்பூரில் 4 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலில் தொடர்புடையதாக தேடப்பட்ட ஆம்பூர் கலால் பிரிவு காவல்துறை துணைகண்காணிப்பாளர் தலைமறைவாகியுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் பாமக ஒன்றிய முன்னாள் செயலாளரான சின்னப்பையன், கடந்த 27ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

வேலூர் - அலமேலுரங்காபுரத்தைச் சேர்ந்த ஜோதிலட்சுமிக்கு இந்த கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து ஜோதிலட்சுமியை விசாரிப்பதற்கு அவர் வீட்டிற்கு தனிப்படை போலீசார் சென்றனர்.
அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏழரை டன் செம்மரக்கட்டைகள் மற்றும் 3 கார்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ஜோதிலட்சுமி மற்றும் அவரது கணவர் நாகேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்கள் இருவரும் அளித்த தகவலின் பேரில், செம்மரக்கடத்தலில் ஆம்பூர் கலால் பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேல் உள்ளிட்ட 5 போலீசாருக்கு தொடர்பு இருப்பதை தனிப்படை போலீசார் கண்டறிந்தனர்.
இதையடுத்து, தலைமைக் காவலர்கள் சவுந்தர், சாமுவேல் மற்றும் ஓட்டுனர்கள் ராஜேஷ், சீனிவாசன் ஆகிய நான்கு போலீசாரை தனிப்படையினர் கைது செய்தனர்.
தலைமறைவாகியுள்ள ஆம்பூர் கலால் பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேலுவை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட பாமக பிரமுகர் சின்னப்பையனுக்கு செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்பு இருந்ததா என்றும் இது தொடர்பான விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications