ம.பி. மாநில ரயில் நிலைய தீவிபத்து எதிரொலி - மேலும் 4 ரயில்கள் ரத்து
சென்னை: மத்திய பிரதேசம் மாநிலம் இடார்சியில் நடந்த ரயில் நிலைய மின்சார விபத்தை தொடர்ந்து ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏற்கனவே தமிழகத்திலிருந்து மபி செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் சென்னை மார்க்கமாக செல்லக்கூடிய 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்ட்ரலில் இருந்து நாளை இரவு 7.15 மணிக்கு டெல்லிக்கு புறப்படக்கூடிய கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ் ரயில் தெற்கு ரயில்வேயால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், 27 ஆம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு சென்ட்ரலில் இருந்து லக்னோவிற்கு புறப்படக்கூடிய வாரம் இரு முறை செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்ட்ரல் வழியாக பெங்களூர்-பாட்னா செல்லக் கூடிய சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூர் கண்டோன்மெண்ட் - பாட்னா செல்லக்கூடிய பிரீமியம் எக்ஸ்பிரஸ் ரயிலும் 28 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications