Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரக்கோணம் - கடித்துக் குதறிய வெறிநாய்... பரிதாபமாக உயிரிழந்த 4 வயது சிறுவன்

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் , அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது தெருநாய் கடித்துக் குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தெருநாய்கள் கடித்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்களும், பலத்த காயங்களுக்கு உள்ளாகும் சம்பவங்களும் சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அரக்கோணம் பகுதியில் தெருநாய்க் கடித்து குதறியதில் 4 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

Arakkonam

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த கணபதியூர் காடு பகுதியில் வசித்து வருகிறார் பாலாஜி. இவர் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் நிர்மல் ராஜ் 4 வயது சிறுவன். இச்சிறுவன் கடந்த 27 ம் தேதி மாலை நேரத்தில் வீட்டிற்கு பின்புறம் இருந்த வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென அப்பகுதியில் இருந்து சிறுவனின் அலறல் சப்தம் கேட்டுள்ளது. அருகிலிருந்தவர் அப்பகுதிக்கு ஓடிச் சென்று பார்த்தபோது சிறுவன் நிர்மல் ராஜை தெருநாய் கடித்துக் குதறிக் கொண்டு இருந்துள்ளது.

நிர்மல்ராஜின் கை, வாய், கால் உள்ளிட்ட பகுதிகளை தெருநாய்க் கடித்து குதறியுள்ளது. இதில், சிறுவன் பலத்த காயமடைந்துள்ளார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், சிறுவனுக்கு ரேபிஸ் நோய் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கடந்த 45 நாள்களாக சிறுவனக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிறுவனின் சடலம் வீட்டுக்கு கூட கொண்டு செல்லப்படாமல் நேரடியாக சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளசது.,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் வளர்ப்பு நாய், சிறுவன் மற்றும் சிறுமியை கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாய்கள் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை விரட்டி கடிக்கச் செல்கின்றன. இதனால், தொடர்ந்து விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே, தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+