ஆந்திராவில் கல் உடைக்கப் போன 40 தமிழக தொழிலாளர்களின் கதி என்ன?
சேலம்: ஆந்திராவிற்கு கல் உடைக்கப் போன 40 தமிழக தொழிலாளர்களின் கதி என்னவானது என்பது தெரியாத காரணத்தால் அவர்களின் உறவினர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை 46 தொழிலாளர்கள் ஆந்திராவுக்கு கல் உடைக்கும் வேலைக்குச் சென்றுள்ளனர்.

இந்த தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீஸ் சுட்டதில் வாழப்பாடியைச் சேர்ந்த ஒருவர் வயிற்றில் குண்டு பாய்ந்தது. 4 தொழிலாளர்களை ஆந்திர போலீஸ் கடப்பா சிறையில் அடைத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர போலீசிடம் இருந்து ஒரு தொழிலாளி தப்பி சொந்த ஊருக்கு வந்தடைந்தனர். மீதமுள்ள 40 தொழிலாளர்களின் கதி என்ன என்று தெரியாததால் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய தப்பி வந்த தொழிலாளி, ஆந்திரா போலீசார் தமிழர்கள் மீது குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்துவதாகவும் அவர்களிடம் இருந்து உயிர் தப்பி வந்தது என்னுடைய மறுஜென்மம் என்று தெரிவித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் 20 தமிழக தொழிலாளர்கள் ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமே தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 40 தொழிலாளர்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications