திருப்பதியில் ராஜபக்சே- நடுக்கடலில் 43 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது சிங்கள கடற்படை!!
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்புகளை மீறி திருப்பதிக்கு ராஜபக்சே வந்திறங்கிய நேரத்தில் நடுக்கடலில் 43 தமிழக மீனவர்களை சிறைபிடித்து சிங்கள கடற்படை அட்டூழியம் செய்துள்ளது.
நடுக்கடலில் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்து சிறையிலடைப்பதும் பின்னர் திடீரென விடுவிப்பதும் வாடிக்கையாக வைத்திருக்கிறது சிங்கள கடற்படை.

இந்த நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த கையோடு மகிந்த ராஜபக்சே திருப்பதிக்கு நேற்று வந்தார். அவருக்கு தமிழகத்திலும் ஆந்திராவிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.
இதே நேரத்தில் நடுக்கடலில் 43 தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் நாகப்பட்டினம், காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள்.
ஏற்கெனவே 38 தமிழக மீனவர்கள் யாழ்ப்பாண சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் கூண்டோடு கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications