கல்லூரி வேன் மீது லாரி மோதல்.. 5 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பலி… 8 பேர் படுகாயம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகில் கல்லூரி வேன் மீது லாரி மோதியது. இதில் 5 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகில் கல்லூரி வேன் மீது லாரி மோதிய விபத்தில் 5 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் பலர் உயிரிழக்கக் கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

இன்று மாலை 4 மணி அளவில் ஐயப்பா கல்லூரி வேன் ஒன்று 18 மாணவிகளை ஏற்றிக் கொண்டு தக்கலை அருகில் புலியூர்குறிச்சியில் என்ற இடத்திற்கு வந்தது. அப்போது, திடீரென்று எதிரில் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக அதன் மீது மோதியது. இந்த கோர விபத்தில் மஞ்சு, சிவரஞ்சனி, தீபா, சங்கீதா உள்ளிட்ட 5 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும், பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

5 college student killed in accident near Thakkalai

படுகாயம் அடைந்த 8 மாணவிகள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் திருவனந்தபுரம் நாகர்கோயில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

5 college student killed in accident near Thakkalai

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டதால் அவரை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+