சிபிசிஐடி நடத்திய விசாரணை நிறைவு.. நிர்மலா தேவி இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்
பேராசிரியை நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி போலீஸார் 5வது நாளாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் : பேராசிரியை நிர்மலாதேவியிடம் சிபிசிஐடி போலீஸார் 5வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். கைதுசெய்யப்பட்ட பேராசிரியர் முருகனிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளிடம், மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணைங்குமாறு அழைப்பு விடுத்த ஆடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது.
இதனையடுத்து, நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். 12 நாட்கள் நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணை முடிவு
இதனையடுத்து, சிபிசிஐடி சிறப்பு அதிகாரி எஸ்பி ராஜேஸ்வரி தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நிர்மலா தேவியிடம், கடந்த 4 நாட்களாக விருதுநகரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்றுடன் 5 நாள் சிபிசிஐடி காவல் முடிந்து இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர்
அதே சமயம் ஆளுநர் நியமித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானமும் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வணிக மேலாண்மைத்துறை உதவி பேராசிரியர் முருகன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வருகை பதிவேட்டில் கையெழுத்திட வந்தபோது கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் தீவிர விசாரணை
இந்த விவகாரத்தில் தலைமறைவான முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கருப்பசாமியின் சொந்த ஊரான திருச்சுழி சென்ற சிபிசிஐடி போலீஸார் கருப்பசாமியின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிபிசிஐடி முடிவு
கடந்த ஓர் ஆண்டாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பதிவான சிசிடிவி வீடியோ காட்சிகளையும் வைத்து விசாரணை செய்ய முடிவுசெய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நிர்மலா தேவியை மீண்டும் சில நாட்கள் காவலில் எடுக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications