சிபிசிஐடி நடத்திய விசாரணை நிறைவு.. நிர்மலா தேவி இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்
பேராசிரியை நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி போலீஸார் 5வது நாளாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் : பேராசிரியை நிர்மலாதேவியிடம் சிபிசிஐடி போலீஸார் 5வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். கைதுசெய்யப்பட்ட பேராசிரியர் முருகனிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளிடம், மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணைங்குமாறு அழைப்பு விடுத்த ஆடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது.
இதனையடுத்து, நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். 12 நாட்கள் நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணை முடிவு
இதனையடுத்து, சிபிசிஐடி சிறப்பு அதிகாரி எஸ்பி ராஜேஸ்வரி தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நிர்மலா தேவியிடம், கடந்த 4 நாட்களாக விருதுநகரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்றுடன் 5 நாள் சிபிசிஐடி காவல் முடிந்து இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர்
அதே சமயம் ஆளுநர் நியமித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானமும் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வணிக மேலாண்மைத்துறை உதவி பேராசிரியர் முருகன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வருகை பதிவேட்டில் கையெழுத்திட வந்தபோது கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் தீவிர விசாரணை
இந்த விவகாரத்தில் தலைமறைவான முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கருப்பசாமியின் சொந்த ஊரான திருச்சுழி சென்ற சிபிசிஐடி போலீஸார் கருப்பசாமியின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிபிசிஐடி முடிவு
கடந்த ஓர் ஆண்டாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பதிவான சிசிடிவி வீடியோ காட்சிகளையும் வைத்து விசாரணை செய்ய முடிவுசெய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நிர்மலா தேவியை மீண்டும் சில நாட்கள் காவலில் எடுக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications