8-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு வங்கிகள் தொடர் விடுமுறை... ஏடிஎம்மை நம்பாதீங்க!
Subscribe to Oneindia Tamil
சென்னை: வங்கிகளுக்கு வரும் அக்டோபர் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் வரும் 12-ஆம் தேதி வரை விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அக்டோபர் 8 (இரண்டாவது சனிக்கிழமை), அக்டோபர் 9 (ஞாயிற்றுக்கிழமை), அக்டோபர் 10 (திங்கள்கிழமை-ஆயுதபூஜை), அக்டோபர் 11 (செவ்வாய்க்கிழமை-விஜயதசமி), அக்டோபர் 12 (புதன்கிழமை-மொஹரம்) ஆகியவை விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து 5 நாள் விடுமுறை வருவதால் பணப் பரிவர்த்தனையை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது. இந்த நாட்களில் ஏடிஎம்களை நம்பி இருப்பது சிரமத்தைக் கொடுக்கும்.
காரணம் விடுமுறைக் காலங்களில் பெரும்பாலானோர் ஏடிஎம் கார்டுகளுடன்தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அதேபோல, விடுமுறை நாட்கள் என்பதால் ஏடிஎம்களில் பணம் நிரப்பப்படுவதிலும் தாமதம் நேரும்.












Click it and Unblock the Notifications