கத்தி முனையில் 4.5 கிலோ தங்க நகைகள் கொள்ளை.. பட்டப்பகலில் கைவரிசை !

கோவையில் உள்ள நகைக்கடை ஒன்றில் புகுந்த மர்மநபர்கள் 4.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை ராஜவீதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் கத்தி முனையில் 4.5 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராஜவீதியில் அமைந்துள்ளது சிட்டி கோல்ட் என்னும் நகைக்கடை. அங்கே இன்று மாலை ஐந்து மணி அளவில் கொள்ளையர்கள் 4 பேர் கத்தியுடன் உள்ளே நுழைந்தனர். கடையில் உள்ள பெண் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்த 4.5 கிலோ அளவிலான தங்க நகைகளை அவர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.

5 kilograms of gold looted in kovai

கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம் என தெரிய வந்துள்ளது. நகை கடையின் வாகன ஓட்டுனர் ரியாசுதீன் என்பவருக்கு இந்த கொள்ளையில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தப்பிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். பொது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+