நெல்லையில் சுற்றித்திரிந்த கூலிப்படையினர் 5 பேர் கைது
நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் பகுதியில் சுற்றித்திரிந்த தூத்துக்குடியைச் சேர்ந்த 5 கூலிப்படையினரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
திருநெல்வேலி : நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 5 கூலிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான கொலை,கொள்ளை, வழிப்பறி,கொலை முயற்சி, கட்டபஞ்சாயத்து உள்ளிட்டவை செய்துகூலிப்படையாக செயல்பட்ட 5 பேர் நெல்லையில் பிடிபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த துரைமுருகன், யோசுபாலன்,கருப்பசாமி,விஜயகுமார், குமரி மாவட்டத்தை சேர்ந்த அர்ஜூன் ஆகியோர் 2 கார்களில் நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் முக்கிய புள்ளி ஒருவரை சந்திக்க வந்துள்ளனர்.
அப்போது பாவூர்சத்திரம் பகுதியை சார்ந்த அரிகிருஷ்னன் என்பவரை வழிமறித்து ரூபாய் ஆயிரத்தை இவர்கள் பறித்து சென்றுள்ளனர். இது குறித்து அவர் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து தனிப்பிரிவு போலீசார் கூலிப்படை கும்பல் சென்ற காரை பல்வேறு பகுதிகளில் தேடி வந்துள்ளனர்.
இந்த கும்பல் ஒரு இடத்தில் நிற்பதை போலீசாருக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ள்னர். இவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தியதில் இவர்கள் அனைவர் மீதும் நெல்லை,கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை,திருவண்ணாமலை, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான வழக்கு உள்ளது தெரியவந்தது. மேலும் அனைத்து வழக்குகளிலும் இவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர். இவர்கள் போலீசில் சிக்கியது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications