ஆட்சி முடியும் நேரத்தில் 5 தமிழக அதிகாரிகளுக்கு 5 ஐ.ஏ.எஸ். அந்தஸ்து தந்த ஜெ. அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசு அலுவலர் 5 பேருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அந்தஸ்து உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன் பிறப்பித்த அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக அரசில் பணியாற்றி வரும் 5 அலுவலர்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக அந்தஸ்து உயர்வு அளித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வி.பி.தண்டபாணி, பி.பொன்னையா, எம்.விஜயலட்சுமி, கே.ராஜமணி, வி.அன்புசெல்வன் ஆகியோருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து அளித்து உத்தரவிடப்படுகிறது.
ஆன்ரூஸ் பொன்ராஜ் வைரமணி தொடர்ந்துள்ள வழக்கில் கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுக்கு இணங்க இந்த அரசாணை செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications