For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன கொடுமை.. மனைவியை அரசு ஊழியரோடு நிர்வாணமாக படம் பிடித்து மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது

Google Oneindia Tamil News

நாமக்கல்: மனைவியை அரசு ஊழியரோடு நிர்வாணமாக படம் பிடித்து ரூ.5 லட்சம் பணம் பறித்த பெண் உட்பட 5 பேரை ராசிபுரம் போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. 56 வயதான இவர் புதுச்சத்திரம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

5 people arrested for seeking money threat

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இராசிபுரம் அருகே உள்ள வையப்பமலையை சேர்ந்த புஷ்பராஜனின் மனைவி விஜயா என்பவர் சிகிச்சைக்காக வந்து சென்றுள்ளார். அப்போது அரசு ஊழியரான கருணாநிதிக்கும், விஜயாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்த விஜயா மருந்துகளை வாங்கிக்கொண்டு இராசிபுரம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் ஏரிக்கரை அருகே வருமாறும் கருணாநிதி அழைத்துள்ளார். இதையடுத்து கருணாநிதி அன்று மாலை ஏரிக்கரைக்கு சென்றார். இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்குவந்த விஜயாவின் கணவர் புஷ்பராஜன், அவரது நண்பர்கள் தஸ்தகீர், சலீம், சந்திரசேகர் ஆகியோர், அங்கிருந்த கருணாநிதியை கத்தியை காட்டி மிரட்டி இருவரும் உல்லாசமாக இருந்த அக்காட்சியை செல்போனில் படம் பிடித்து அந்த படத்தை கருணாநிதியிடம் காட்டி ரூ.5 லட்சம் தர வேண்டும் என மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்துபோன கருணாநிதி தன் நண்பர்களிடம் கேட்டு வாங்கி. அன்றே அவர்களிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். பின்னர் தொடர்ந்து மிரட்டிய அந்த கும்பல் அவ்வப்போது பணம் பிடுங்கி கொஞ்சம்..கொஞ்சமாக ரூ.5 லட்சத்தை கருணாநிதியிடம் இருந்து இக்கும்பல் பறித்துக்கொண்டது. இந்த நிலையில் அந்த கும்பல் மீண்டும் கருணாநிதியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளது.

மனம் வெறுத்த கருணாநிதி இதுகுறித்து இராசிபுரம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். இந்த புகார் குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவின்பேரில், இராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து விசாரணை மேற்கொண்டனர்.

முதலில், விஜயாவை கைது செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள கல்லாங்குத்து பகுதியில் வசிக்கும் தஸ்தீகர் வீட்டில் இருந்த புஷ்பராஜன், தஸ்தகீர் அவருடைய மகன் சலீம் மற்றும் பெரியமணலியைச் சேர்ந்த டிரைவர் சந்திரசேகர் ஆகிய 4 பேரையும் கைது செய்தார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

English summary
woman inculding 5 people arrested for seeking money threat to government officer at rasipuram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X