For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கணக்கில் காட்டாத 50 லட்சம் ரூபாய் பறிமுதல்.. போலீசில் சிக்கிய முன்னாள் தலைமை என்ஜினியர்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறையில் தலைமை என்ஜினியராக இருந்து ஓய்வு பெற்ற ஜெயராமன் வீட்டில் இருந்து கணக்கில் காட்டாத 50 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

50 lakhs black money seized from retired chief engineer

தமிழக நெடுஞ்சாலைத்துறை முன்னாள் தலைமை என்ஜினியராக பணியாற்றியவர் ஜெயராமன். இவர் கட்டடம், மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், சாலை போடும் ஒப்பந்தம் வழங்குவதற்காக லஞ்சம் பெற்றதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது.

இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயராமன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அவரது வீட்டில் இருந்த கணக்கில் காட்டப்படாத 50 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

English summary
50 lakh black money was seized from retired chief engineer by police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X