சென்னை அண்ணாநகரில் வீட்டின் பூட்டை உடைத்து ஆட்டைய போட்ட மர்மநபர்கள்.. 50 சவரன் கொள்ளை!
வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை அண்ணாநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அண்ணா நகர் மேற்கு ஏசியாத் காலனியில் வசித்து வருபவர் பார்த்தசாரதி. இவரது மனைவி வேதவல்லி, வருமானவரித்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். இவர்கள் வசித்து வருவது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீடு. இவர்களது மகள் பெங்களூரில் வசிக்கவே, அவரை பார்க்க கடந்த 8-ம் தேதி வீட்டை பூட்டை விட்டு பெற்றோர் இருவரும் சென்றனர்.

பின்னர் நேற்றிரவுதான் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது மர்மநபர்கள் பீரோவிலிருந்த 50 சவரன் நகைககளை கொள்ளையடித்து சென்றிருந்தனர்.
அத்துடன் 20 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளிப் பொருட்களையும் திருடி சென்றிருந்தது தெரியவந்தது. இந்த திருட்டு குறித்து திருமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications