2 விபத்துக்களில் 6 பேர் பரிதாப பலி... 3 பேர் பெண்கள், இருவர் குழந்தைகள்
சென்னை: சென்னை மற்றும் விருதுநகர் அருகே நடந்த இரு வேறு விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்தனர்
இன்று அதிகாலை மேல்மருவத்தூர் அருகே ஜிஎஸ்டி சாலையில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 பெண் பக்தர்கள் உள்ளிட்ட 4 பேர் பலியானார்கள்.
பலியானவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாத்தூரை சேர்ந்த பத்மாவதி, முனியம்மாள் மற்றும் அமுதா என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் திவாகரன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதே போல் விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரில் நள்ளிரவு சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில். இதில் காரில் பயணம் செய்த கோவில்பட்டியைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவரும் பால விஷாலி என்ற குழந்தையும் பலியாயினர். மேலும் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இதேபோல காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவன பஸ் மீது லாரி ஒன்று மோதியது. இதில் லாரி லேசான சேதமடைந்தது. அதேசமயம், பேருந்தின் முன்பகுதி பெரும் சேதத்தைச் சந்தித்தது.
அதேபோல காஞ்சிபுரம் அருகே சென்று கொண்டிருந்த ஒரு தனியார் நிறுவன வேன் வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வேனின் பின்பகுதி பெரும் சேதமடைந்தது.