ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையம்.. பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு!
ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது.
சென்னை: ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு சிகிச்சை மேற்கொண்ட அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார்.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. தமிழக அரசால் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த விசாரணை ஆணையம் முன்னாள் தலைமை செயலாளர் உட்பட பலரிடமும் விசாரணை செய்தது. இந்த நிலையில் தற்போது இந்த விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி இன்னும் கூடுதலாக 6 மாதம் இந்த விசாரணை ஆணையம் செயல்படும். மேலும் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் தலைவராக தொடர்வார் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications