65 வயது பாட்டியை சீரழித்த 35 வயது ஜேசிபி டிரைவர்.. காரணம் டாஸ்மாக்!
கரூர்: டாஸ்மாக்கில் மது அருந்தி விட்டு போதையில் 65 வயது பாட்டியை சீரழித்து விட்டார் ஒரு ஜேசிபி டிரைவர். அந்த டிரைவருக்கு வயது 35 ஆகும்.
குடிகாரர்களால் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லி மாளாது. சாலை விபத்துகள், அடிதடி வெட்டுக் குத்து, பாலியல் பலாத்காரம் என சகலவிதமான குற்றச் செயல்களிலும் குடிகாரர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இந்த நிலையில் 65 வயது பாட்டியை பலாத்காரம் செய்துள்ளார் ஒரு குடிகார டிரைவர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட வெள்ளியணை பகுதியை சார்ந்தவர் விஸ்வநாதன் (35), இவர் இப்பகுதியில் ஜே.சி.பி டிரைவராக உள்ளார். இந்நிலையில் அம்மையப்பகவுண்டபுதூரில் இவருக்கு நெருக்கமான ஒரு பெண்ணின் வீடு உள்ளது.
இந்த பகுதியில் நேற்று அளவுக்கு அதிகமான மது போதையில் அவர் தனது நெருக்கமான பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால் அந்த வீட்டுக்குப் போவதற்குப் பதில் பக்கத்து வீட்டுக்குள் போய் விட்டார். அங்கு காற்றாட வெளியில் தூங்கிக் கொண்டிருந்த சுமார் 65 வயது (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) மூதாட்டியைப் பார்த்து போதை கண்ணை மறைக்க அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.
அந்தப் பெண்ணின் கூக்குரலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். விஸ்வநாதனைப் பிடித்து இழுத்து சரமாரியாக தர்ம அடி போட்டனர். பின்னர் வெள்ளியணை போலீசில் ஒப்படைத்துள்ளனர்.