தமிழகத்தில் 100 வயதை தாண்டிய வாக்காளர்கள் 7,627 பேர் உள்ளனர்: ராஜேஷ் லக்கானி
சென்னை: தமிழகத்தில் 100 வயதை தாண்டிய வாக்காளர்கள் 7 ஆயிரத்து 627 பேர் உள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்தும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக இருப்பதாக திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் சைதியிடம் புகார் அளித்துள்ளன.

இந்த சூழலில் லக்கானி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
4 லட்சத்து 75 ஆயிரம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் 100 வயதை தாண்டிய வாக்காளர்கள் 7 ஆயிரத்து 627 பேர் உள்ளனர். அதில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 597 பேர் உள்ளனர்.
தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் 122 பேர் நாளை தமிழகம் வருகிறார்கள். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளாட்சி பொறுப்பை ராஜினாமா செய்யத் தேவையில்லை என்றார்.












Click it and Unblock the Notifications