மின்சார ரயிலில் சிக்கி 7 எருமைகள் பரிதாப பலி – ரயில்கள் ஒருமணி நேரம் தாமதம்!
Subscribe to Oneindia Tamil
அரக்கோணம்: அரக்கோணத்தில் மின்சார ரயிலில் மோதி 7 எருமை மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில் நேற்றிரவு சென்றது. திருவாலாங்காடில் இருந்து மோசூர் இடையே ரயில் சென்றபோது தண்டவாளத்தில் நின்ற எருமை மாடுகள் மீது ரயில் மோதியது. இதில் 7 எருமை மாடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன.
மாடுகள் மீது ரயில் மோதியதால் ரயில் பெட்டிகளை இணைக்கும் இணைப்பு கம்பி ஒன்று உடைந்தது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டது. அரக்கோணத்தில் இருந்து ரயில்வே ஊழியர்கள் சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஒருமணி நேரத்துக்கு பின் சீரமைக்கப்பட்டு ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியே சென்னை சென்ற ரயில்கள் ஒருமணி நேரம் தாமதமாக சென்றன.












Click it and Unblock the Notifications