அதிமுக, திமுகவைத் தொடர்ந்து காங்கிரசிலும் களையெடுப்பு ஆரம்பம்..7 மாவட்டத் தலைவர்கள் மாற்றம் !
சென்னை: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நிறைவடைந்தப் பிறகு அதிமுக, திமுகவில் மாவட்ட நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட நிலையில், காங்கிரஸ் கட்சியில் 7 மாவட்டத் தலைவர்களை நீக்கம் செய்து அக்கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்த பகுதிகளின் பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை மாற்றி அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து திமுகவிலும், சேலம், நாமக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டச் செயலாளர்கள் நீக்கம் செய்யப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 மாவட்டத் தலைவர்களை நீக்கம் செய்து அக்கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட கமிட்டித் தலைவராக பதவி வகிக்கும் பூவை பீ.ஜேம்ஸ், வெங்கடாசலம், எஸ்.ராஜ்குமார், கே.ராம்நாத்,எஸ்.கே.டி.பி.காமராஜ், வி.பாலையா, கே.டி.ராஜகுமாரவேல் ஆகியோர் நீக்கப்பட்டு, புதிதாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட பொறுப்பாளர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
புதிய பொறுப்பாளர்கள் விவரம்:
திருவள்ளூர் தெற்கு - ஜெ.பாலமுருகன்
திருப்பூர் புறநகர் - கே.தென்னரசு
நாகப்பட்டிணம் வடக்கு- டி.சொக்கலிங்கம்
திருநெல்வேலி மேற்கு - எஸ். பழனி நாடார்
திருநெல்வேலி மாநகர்- டி.எல்.உமாபதி சிவன்
கன்னியாகுமரி கிழக்கு - ஆர்.ராதாகிருஷ்ணன்
கிருஷ்ணகிரி - எஸ்.நாரயணமூர்த்தி
ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளாத இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications