For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பணம் கேட்டு 7 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை தமிழ் மீனவர்கள்

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: சிங்ளக் கடற்படைக்குப் போட்டியாக தற்போது இலங்கை தமிழ் மீனவர்களும் இறங்கி விட்டனர். பணத்துக்காக தமிழக மீ்னவர்கள் 7 பேரை கடத்தி வைத்து மிரட்டல் விடுத்துள்ள செயல் தமிழக மீனவர்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாம்பன் பகுதியை சேர்ந்த சகாயம் என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் அகஸ்டின், முனியசாமி, செல்வம், பூரனம், பாண்டி, மாணிக்கம் உள்ளிட்ட 7 மீனவர்கள் கடந்த 1-ஆம் தேதி கோடியக்கரையில் மீன்பிடிக்க சென்றனர். ஆனால் அவர்கள் கரை திரும்பவில்லை.

7 Pamban fishermen kidnapped by Lankan fishermen

இந்த நிலையில் அவர்களது போனில் உறவினர்கள் தொடர்பு கொண்ட போது படகில் உள்ள தொலைபேசியை இலங்கையை சேர்ந்தவர்கள் எடுத்துள்ளனர். அதில் பேசிய நபர்கள், படகையும் 7 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என்றால் பணம் தரவேண்டும் என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் உறவினர்கள்.

மறுமுனையில் பேசியவர்கள் இலங்கைத் தமிழ் மீனவர்கள் ஆவர். இதுவரை சிங்களக் கடற்படைதான் அட்டூழியம் செய்து வந்தது. தற்போது தமிழ் மீனவர்கள் பணத்துக்காக தமிழக மீனவர்களையும், படகுகளையும் கடத்தியிருக்கும் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம்: சிங்ளக் கடற்படைக்குப் போட்டியாக தற்போது இலங்கை தமிழ் மீனவர்களும் இறங்கி விட்டனர். பணத்துக்காக தமிழக மீ்னவர்கள் 7 பேரை கடத்தி வைத்து மிரட்டல் விடுத்துள்ள செயல் தமிழக மீனவர்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாம்பன் பகுதியை சேர்ந்த சகாயம் என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் அகஸ்டின், முனியசாமி, செல்வம், பூரனம், பாண்டி, மாணிக்கம் உள்ளிட்ட 7 மீனவர்கள் கடந்த 1-ஆம் தேதி கோடியக்கரையில் மீன்பிடிக்க சென்றனர். ஆனால் அவர்கள் கரை திரும்பவில்லை.

இந்த நிலையில் அவர்களது போனில் உறவினர்கள் தொடர்பு கொண்ட போது படகில் உள்ள தொலைபேசியை இலங்கையை சேர்ந்தவர்கள் எடுத்துள்ளனர். அதில் பேசிய நபர்கள், படகையும் 7 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என்றால் பணம் தரவேண்டும் என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் உறவினர்கள்.

மறுமுனையில் பேசியவர்கள் இலங்கைத் தமிழ் மீனவர்கள் ஆவர். இதுவரை சிங்களக் கடற்படைதான் அட்டூழியம் செய்து வந்தது. தற்போது தமிழ் மீனவர்கள் பணத்துக்காக தமிழக மீனவர்களையும், படகுகளையும் கடத்தியிருக்கும் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
7 Pamban fishermen have been kidnapped by Lankan fishermen for ransom.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X