இந்தி எதிர்ப்பு.. பூரண மதுவிலக்கு.. போராட்டங்கள் தொடரும்.. திமுக மா.செ. கூட்டத்தில் 7 தீர்மானங்கள்
இந்தி எதிர்ப்பை வலியுறுத்தி தொடர் கருத்தரங்கள் நடத்தப்படும் என்றும் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை: சென்னையில் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திமுக பொதுச் செயலளாளர் க. அன்பழகன், திமுகவின் கட்சிப் பணிகள் குறித்து மாவட்டம் வாரியாக உள்ள மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் பங்கேற்ற நிலையில், 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தி திணிப்பிற்கு எதிராக மாநில முழுவதும் திமுக சார்பில் தொடர்ந்து கருத்தரங்கங்கள் நடத்தப்படும். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு தரும் 2 மசோதாவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்க வேண்டும். விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும். குடிநீர் பிரச்சனையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். முழுஅடைப்பு போராட்டத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் அனைவரும் நன்றி ஆகிய 7 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications