நாட்டிலேயே முதல்முறை.. "மைக்ரோ அப்சர்வர்கள்" கண்காணிப்பு வளையத்தில் ஆர்.கே.நகர்!
தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக நுண் கண்காணிப்பு படையினர் 70 பேர் ஆர்.கே.நகரில் பயன்படுத்தப்படவுள்ளனர்.
சென்னை: ஆர்.கே.நகரில் உள்ள பணப்பட்டுவாடாவை தடுக்க வீதி, வீதியாக, சந்து பொந்துகள் வழியாக கண்காணிக்க நுண் கண்காணிப்பு படையினர் 70 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடைபெற இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில், நாளுக்கு நாளுக்கு பணப்பட்டுவாடா பயங்கரமாக திருமங்கலத்தை விஞ்சும் அளவுக்கு நடந்து வருகிறது.
இதைத் தடுக்க தேர்தல் ஆணையமும் பல்வேறு வகையில் கண்காணித்து வந்தாலும், அவர்களது கண்ணில் மண்ணை தூவிவிட்டு பண வினியோகத்தில் கட்சியினர் ஈடுபடுகின்றனர்.

மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி
இதனால் திணறி வரும் தேர்தல் ஆணையத்திடம் இடைதேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஒரு சாராரும், முறைகேட்டை தடுக்க வேண்டும் என்று மறு சாராரும் கோரி வருகின்றனர். பணம் வினியோகத்தை தடுக்கும் விதமாக நடவடிக்கை குறித்து தண்டையார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக
அதில் இந்தியாவிலேயே முதல் முறையாக நுண் கண்காணிப்பு பார்வையாளர்கள் 70 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் ஆர்.கே.நகர் தொகுதிக்குள்பட்ட இடங்களில் உள்ள தெருக்கள், சந்து பொந்துகளில் இரு சக்கர வாகனங்களில் ரோந்து மேற்கொள்வர்.

நடவடிக்கை
அச்சமயம் பணப்பட்டுவாடாவில் ஈடுபடும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பவர். ஒரு இரு சக்கர வாகனத்தில் ஒரு பார்வையாளருடன் ஒரு போலீஸ்காரரும உடன் செல்வார். குறிப்பிட்ட பகுதிகளில் தேர்தல் முறைகேடுகள் குறித்து உண்மையான புகார்கள் வந்தால் அங்கு சென்று அதை தடுத்து நிறுத்துவதோடு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர்.

சுழற்சி முறையில்
இந்த 70 பேரும் மூன்று ஷிப்ட்கள் அடிப்படையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். மொத்தம் உள்ள 256 வாக்குச் சாவடிகளிலும் இவர்கள் தேர்தல் நடைபெறும் வரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். இது தவிர 30 பறக்கும் படைகளும் கண்காணிப்பு பணி செய்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.14 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்துள்ளோம். இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதே தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள் என்றார் கார்த்திகேயன்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications