நல்லொழுக்கம் கல்வியில் உயர்வு தரும்.. தேவகோட்டை பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
விழாவிற்கு வருகை தந்தவர்களை மாணவர் ரஞ்சித் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். உலகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ராம .ஆதிரெத்தினம் (ஓய்வு ) தேசிய கோடியை ஏற்றி வைத்து மாணவர்களிடம் பேசினார்.

அவர் பேசுகையில், நல்ல ஒழுக்கம்தான் உங்களுக்கு நல்ல கல்வியை தரும்.நீங்கள் வாழ்க்கையில் எந்த உயிரையும் கொள்ள கூடாது,பொய் சொல்ல கூடாது, திருடக் கூடாது என விதிகளை வகுத்து கொண்டு அதனை கடைபிடித்தால் வாழ்க்கையில் வெற்றிகளை பெற முடியும். மகாத்மா காந்தி பொய் சொல்ல கூடாது என்பதை வேத வாக்காக எடுத்து கொண்டு அதன் வாயிலாக சுதந்திரத்துக்கு வித்திட்டார்.

நம்மை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும்.நேரத்தையும், காலத்தையும் நம் நமது துணையாக கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். தனி மரம் தோப்பாகாது என்பார்கள். ஆனால் தனிமரம் தோப்பாகும். எப்போது என்றால் அதனை சரியான முறையில் வைத்து பராமரித்தால் தோப்பில் உள்ள தனி, தனி மரமும் தோப்பாக காட்சி அளிக்கும். அது போல் நீங்கள் அனைவரும் தனித், தனியாக நல்ல முறையில் செயல்பட்டால் அவை அனைத்தும் கூட்டு முயற்சியாகி நல்ல வெற்றியை உங்கள் பள்ளிக்கு கொடுக்கும் என்றார்.

விழாவின் தொடக்கமாக திருக்குறள் நாட்டியம் நடைபெற்றது. விழாவில் மாணவர்கள் முத்தையன், ஆகாஷ், சந்தோஷ், திவ்யஸ்ரீ, ஜெயஸ்ரீ, சந்தியா, அனுசுயா ஆகியோர் காந்தியடிகள் பற்றி பாடலும், ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற தலைப்பில் வெங்கட்ராமனும், காந்தியின் மணிமொழிகள் தொடர்பாக கீர்த்தியாவும் , கலாமின் கனவுகள் என்ற தலைப்பில் அஜய் பிரகாஷும், மண்ணின் மகுடங்கள் என்ற தலைப்பில் பாடல்களாக காயத்ரி, மாதரசி, சந்தியா, பாக்கியலெட்சுமி , நித்திய கல்யாணி ஆகியோரும் பேசினர்.

இந்திய தாய்க்கு ஒரு கடிதம் என்கிற தலைப்பிலான கவிதையை ஜெனிபரும், சுதந்திர தினம் தொடர்பாக ஆங்கில உரையை தனலெட்சுமியும், தேசப்பெருமை என்கிற தலைப்பிலான பாடலை அல்நிஸ்மா, பார்கவி லலிதா, சின்னம்மாள் ஆகியோரும் பாடினார்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை சாந்தி செய்து இருந்தார். விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் வழங்கப்பட்டது. விழா நிறைவாக மாணவி ராஜி நன்றி கூறினார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications