Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

75-வயது மூதாட்டியை சரமாரியாக தாக்கிய போலீஸ்.. சீரியஸான நிலையில் மூதாட்டிக்கு சிகிச்சை

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை அருகே குடும்பப் பிரச்சனை குறித்த விசாரணையின் போது 75-வயது மூதாட்டி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில், தவசக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கொங்கை ஈஸ்வரன். விவசாயக் கூலியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இதனிடையே ஈஸ்வரனுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது சாந்திக்கு தெரியவரவே கணவன், மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

75-year old women beaten by police in Sivagangai

இந்நிலையில், சாந்தி அளித்த புகாரின் பேரில் ஈஸ்வரனையும், அவருடைய 75 வயதான தாயார் வெள்ளச்சியையும் காளையார் கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனிடையே, விசாரணையின்போது, ஈஸ்வரன் மற்றும் வெள்ளச்சி மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், வெள்ளச்சி அங்கேயே மயங்கி விழுந்துவிட்டாராம். இதனால், வெள்ளச்சியை வீட்டுக்கு கொண்டு போகும் படி போலீஸார் கூறினார்களாம். வீட்டுக்கு வந்த பின்னரும் மூதாட்டிக்கு மயக்கம் தெளியவில்லை. இதனால், அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், மூதாட்டியின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதித்தனர்.

இது குறித்து ஈஸ்வரன் கூறுகையில், குடும்பச் சண்டை தொடர்பாக எனது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை செய்வதாக கூறி என்னை போலீஸார் இழுத்துச் சென்றனர். எனது அம்மாவும் என்னுடன் வந்திருந்தார்.

விசாரணை என்ற பெயரில் என்னையும் என் தாயையும் காவலர்கள் லத்தியால் கடுமையாக தாக்கினர். மேலும், இரண்டு மகளிர் காவலர்களும் சேர்ந்து தாக்கினார்கள். வயதானவர் என தெரிந்தும் பூட்ஸ் காலால் உதைத்தார்கள். எனது தாய் அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். தற்போது அவர் சீரியஸான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் என்று தெரிவித்தார்.

இது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் சிவகங்கை மாவட்ட எஸ்பிக்கு கடிதம் ஒன்றும் எழுதியுள்ளனர். சாதாரண குடும்பச் சண்டைக்கு மூதாட்டி என கூட பார்க்காமல் காவலர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+