8 வயது குழந்தை பலாத்காரம் - கைதான இளைஞர் தற்கொலைக்கு முயற்சி
வேலூர்: வேலூரில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்து கைதான இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் குமார். இவர் வேலூர் தனியார் பொறியியல் கல்லூரியில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தான் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து இவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதில் சிறுமி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இளைஞர் சதிஷ் குமார் மகளிர் காவல் நிலையத்தில் விசாரணையின்போது இன்று மாலை தனது கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிசிக்சைக்கு பின் வேலூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.












Click it and Unblock the Notifications