தேவாசீர்வாதத்திற்கு நேரம் சரியில்லை.. 19 நாளில் மீண்டும் மாற்றம்.. இம்முறை மத்திய பணிக்கு!
டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்பட 9 ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
சென்னை: டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல்துறை நல்வாழ்வு துறை ஐ.ஜியாக மாற்றம் செய்யப்பட்ட 16 நாட்களில் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருடன் மேலும் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம்தான் தமிழக உளவுத் துறை ஐ.ஜி. பதவியில் இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை காவல்துறை நல்வாழ்வு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார். தமிழகத்தின் முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் இருந்த போது, உளவுத் துறை ஐ.ஜி.யாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. உளவுத் துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு 11 நாட்களில், அவர் காவல்துறை நல்வாழ்வு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். மீண்டும் 16 நாட்களில் மத்திய அரசு பணிக்கு தமிழக அரசால் அனுப்பப்பட்டுள்ளார்.

மேலும், லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு துறை இணை இயக்குனராக இருந்த ஜி. வெங்கடராமன் மற்றும் திருப்பூர் நகர கமிஷனராக இருந்த சஞ்சய் மாத்தூர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மதுரை ரேஞ்ச்சில் அதிகாரியாக இருந்த ஆனந்த் குமார் சோமணி, விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த கே.எஸ். நரேந்திரன் நாயர், ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த பி. விஜயகுமார் ஆகியோர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அனில் குமார், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏ. சரவணன், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர எஸ். பிதாரி ஆகியோரும் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications