போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் மீது குண்டாஸ்! சிறையில் அடைப்பு!
போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 100 போலி பாஸ்போர்ட்டுகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 25ஆம் தேதி பறிமுதல் செய்தனர்.
போலி பாஸ்போர்ட்கள் வைத்திருந்ததாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையை சேர்ந்த ஹரிகுமார், சுரேஷ், சரவணன், குணாலன் உள்பட 10 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்களிடம், பாஸ்போர்ட்களை விரைவாக பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றியுள்ளனர்.
அவர்களிடமிருந்து சுமார் 100 போலி பாஸ்போர்ட்கள் மற்றும் இலங்கை, பங்களாதேஷ் போன்ற சர்வதேச நாடுகளின் சீல்கள் போன்றவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவை அனைத்தையும் அவர்களே போலியாக தயாரித்திருப்பது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இந்த 10 பேர் கொண்ட குழுவினர் சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அலுவலகங்கள் வைத்து நடத்தி இளைஞர்களை ஏமாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரில் 9 பேர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 9 பேர் குண்டாஸில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications