தனியார் பள்ளி நெருக்கடி.. 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை
சென்னை: சரியாகப் படிக்கவில்லை என தனியார் பள்ளி நிர்வாகம் கொடுத்த நெருக்கடி காரணமாக சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் பிரசாந்த் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் பள்ளி நிர்வாகங்கள் 9-ம் வகுப்பிலேயே மாணவர்களை வடிகட்டுவதை வழக்கமாக வைத்துள்ளன. இப்போது அரசுப் பள்ளிகளிலும் கூட இந்த முறையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளன. இதனால் மாணவர்களும் பெற்றோரும் பெருந்துன்பத்துக்கு ஆளாகின்றனர்.

மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்திலுமே, 9- ம் வகுப்பு இறுதியில் சரியாகப் படிக்காத மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வேறு பள்ளியைப் பாருங்கள் என்று அனுப்பிவிடுகின்றனர்.
மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள ஹோலி பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் பிரசாந்த் (14). இவனது தாய் தந்தை பூ வியாபாரம் செய்து வருகிறார்கள்.
பள்ளி இறுதித் தேர்வை எழுதி முடித்துவிட்டான் பிரசாந்த். சமீபத்தில் பிரசாந்தின் பெற்றோரை அழைத்த பள்ளி நிர்வாகம், அவன் நான்கு பாடங்களில் தோல்வியடைந்திருப்பதாகவும், பத்தாம் வகுப்பு இந்தப் பள்ளியில் தொடர முடியாது என்றும் கூறிவிட்டார்களாம்.
இதனால் கடும் மன உளைச்சலடைந்த மாணவன் பிரசாந்த் நேற்று இரவு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டான்.
இதுகுறித்து மடிப்பாக்கம் காவல் துணை ஆய்வாளர் மணி கூறுகையில், "மாணவன் பிரசாந்த் சரியாகப் படிக்கவில்லை என்பதால், வேறு பள்ளிக்குப் போகச் சொல்லிவிட்டதாம் பள்ளி நிர்வாகம். அதன்காரணமாகவே இந்த தற்கொலை என்பது விசாரணையில் தெரிந்தது. வேட்டியை எடுத்து மின்விசிறி கொக்கியில் மாட்டி தூக்கிட்டுக் கொண்டுள்ளான் பிரசாந்த். அப்போது வீட்டில் அவன் அம்மா இல்லையாம். அப்பா ஹாலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்ததால், பிரசாந்த் தூக்கிட்டுக் கொண்டதே காலையில்தான் தெரிந்திருக்கிறது," என்றார்.
இந்தப் பள்ளியில் இது 6-வது தற்கொலை
இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகிறது. இதுவரை 6 மாணவர்கள் இதே போன்ற காரணங்களுக்காக தற்கொலை செய்துள்ளனர். ஏற்கெனவே ஒரு தற்கொலை வழக்கில் இந்தப் பள்ளியின் தாளாளர் கைதாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications