For Daily Alerts
Just In
கண்களை கட்டிக்கொண்டு ஒரு கையால் கீ போர்டு வாசித்த சென்னை சிறுவன்!!
சென்னையை சேர்ந்த 7 வயது சிறுவன் கண்களைக் கட்டிக்கொண்டு ஒரு கையால் கீ போர்டு வாசித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
சென்னை: 7 வயது சிறுவன் கண்களைக் கட்டிக் கொண்டு ஒரு கையால் கீ போர்டு வாசித்தது பார்வையாளர்களை வியப்பில் அழ்த்தியுள்ளது. யூ ட்யூப்பில் போடப்பட்டுள்ள சிறுவனின் அந்த வீடியோவை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.
சென்னையை சேர்ந்த 7 வயது சிறுவன் ஜெ.ஒய்.ஷாரு ஸ்கந்தன். ஆழ்வார் திருநகரில் உள்ள பீதோவன் இசைப் பள்ளியில் கடந்த 6 மாதங்களாக இசை பயிற்சி பெற்று வருகிறார்.
இவர் கடந்த வாரம் பள்ளியில் நடைபெற்ற சான்றிதழ்கள் வழங்கும் விழாவில் கண்களைக் கட்டிக்கொண்டு ஒரு கையாலேயே கீ போர்டு வாசித்தார். அந்த வீடியோ யூ ட்யூப் தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதனை ஏராளமானோர் பார்த்து ரசித்து வருகின்றனர். அந்த வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு...
Comments
English summary
A 7 year old boy has performed blind folded keyboard play in Chennai last week during Certificate distribution function in his music school Beethoven music school.