ஒரு நொடியில் துண்டான கால்.. ரயிலில் இருந்து தவறி விழுந்த சிறுவன்.. திருமங்கலத்தில் நேர்ந்த கொடூரம்
திருமங்கலம்: திருமங்கலத்தில் ரயிலில் இருந்து இறங்கிய சிறுவன் தவறி தண்டவாளத்தில் விழுந்த நிலையில், ரயில் சக்கரத்தில் சிக்கிய சிறுவனின் கால் துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பொதுமக்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் ரயில் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமல்லாமல், உணவு, வாகனங்கள், இயந்திர உதிரி பாகங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல என சரக்குப் போக்குவரத்துக்கும் ரயில் போக்குவரத்து தேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுவாக வெளி மாவட்டங்களுக்கு மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்ல பொதுமக்கள் பெரும்பாலும் முதலில் தேர்வு செய்வது ரயில் போக்குவரத்து சேவையை தான். இந்நிலையில், பொதுமக்களின் கவனக் குறைவால் சில நேரங்களில் விபத்துகளும் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன. ரயில் படிக்கட்டில் பயணம் செய்வது, ரயில் கிளம்பியவுடன் ஓடிச் சென்று ஏறுவது, ரயில் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இறங்குவது போன்ற நடவடிக்கையால் அசம்பாவிதங்களும் ஏற்படுவது வழக்கம்.
அந்த வகையில், திருமங்கலத்தில் ரயிலில் இருந்து இறங்கியபோது சிறுவன் ஒருவர் தண்டவாளத்தில் தவறி விழுந்தபோது, சிறுவனின் கால் ரயிலின் சக்கரத்தில் சிக்கி துண்டான சம்பவம் அப்பகுதியில் பதைபதைப்பை ஏற்படுத்தியது.
திருமங்கலம் அருகே உள்ள பெரிய ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டி (39). விவசாயியான இவரது மனைவி இருளாகி. இத்தம்பதிக்கு கருப்பு வாண்டையார் (11) எனும் மகன் உள்ளார். பெருங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், இருளாயி தனது தாய் பழனியம்மாள், மகன் கருப்பு வாண்டையாரோடு பொள்ளாச்சி சென்று விட்டு பாலக்காடு திருச்செந்துார் ரயிலில் திருமங்கலத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார்.
அப்போது, திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு காலை 11 மணியளவில் ரயில் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, பயணிகள் அனைவரும் இறங்கியுள்ளனர். அப்போது, சிறுவன் கருப்பு வாண்டையாரும் ரயிலில் இருந்து இறங்க முயன்றுள்ளார். அப்போது, திடீரென ரயில் கிளம்பியதால் கருப்பு வாண்டையார் தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.
இதில், ரயில் சக்கரத்தில் சிறுவனின் வலது கால் சிக்கிய நிலையில், அங்கிருந்த பயணிகள் பதறிப்போய் கூச்சலிட்டனர். இதையடுத்து, ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர், ரயிலின் சக்கரத்தில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவனின் கால் ரயிலின் சக்கரத்தில் சிக்கியதால் மிகவும் சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து, அறுவை சிகிச்சையின் மூலமாக மருத்துவர்கள் சிறுவனின் வலது காலை அகற்றினர். இந்த விபத்து தொடர்பாக மதுரை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயின் கண் முன்னே சிறுவனின் கால் ரயிலின் சக்கரத்தில் சிக்கி துண்டான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications