ஓட்டுநர் இல்லாமல் தானாக ஓடிய பேருந்து.. நெல்லையில் விநோத விபத்து
நெல்லையில் பேருந்து ஒன்று ஓட்டுநர் இல்லாமல் தானாக ஓடி இருக்கிறது.
நெல்லை: நெல்லையில் பேருந்து ஒன்று ஓட்டுநர் இல்லாமல் தானாக ஓடி இருக்கிறது. ஓட்டுனரின் கவனக்குறைவு காரணமாக தற்போது அங்கு விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை பேருந்து நிலையம் வெளியே செங்கோட்டையில் இருந்து கோவில்பட்டி செல்லும் அரசு பேருந்தை ஓட்டுநர் செல்வம் என்பவர் நிறுத்தி விட்டு சாப்பிட சென்றுவிட்டார். காலை நேரம் என்பதால் ஏராளமான பயணிகள் பேருந்து நிலையம் இருந்தும் திறக்கவில்லை என்பதால் ரோட்டில் நின்றனர்.

இந்த நிலையில் பேருந்து எஞ்சிந் தானாக இயங்கி பேருந்து தானாகவே சாலையில் ஓடியது. அப்போது அங்கே நிறுத்தி இருந்த மினி பேருந்து மீது இந்த பேருந்து மோதியது. மினி பேருந்தில் இருந்து பயணிகள் வெளியே குதித்து உயிர்தப்பினர்.
உடனடியாக அங்கே இருந்த தனியார் மினி பேருந்து ஓட்டுனர் பேருந்தை கியரில் போட்டு பலமாக பிரேக் போட்டு நிறுத்தினார். பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கி விட்டார். அரசு பேருந்து மினி பேருந்து மீது மோதாமல் இருந்திருந்தால் பஸ் ஏற காத்திருந்த பயணிகளுக்கு உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும் என பொது மக்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications