சேலம் அருகே கருக்கலைப்பு செய்த கல்லூரி மாணவி பலி.. போலி டாக்டர் கைது
சேலம் அருகே கருக்கலைப்பு செய்த கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஓமலூர் அருகே கருக்கலைப்பு செய்த கல்லூரி மாணவி உயிரிழப்பு
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கருக்கலைப்பு செய்த கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவரிடம் கருக்கலைப்பு செய்துள்ளார். ஆனால் இதில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். போலி மருத்துவரிடம் கருக்கலைப்பு செய்ததே மாணவி உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவ அதிகாரி சத்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து மருத்துவம் படிக்காமல் கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் சுல்தானா கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications