விஷால் , தீபாக்கே இப்படினா ”ஆண்டவர்” மனுதாக்கல் செய்தால்.... என்ன ஆகும்? கலகல பேஸ்புக் பதிவு
நடிகர் விஷால், தீபா வேட்புமனு நிராகரிப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video

சென்னை: ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால், தீபா ஆகியோரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது சமூக வலைத்தளங்கள் பேசு பொருள் ஆகி இருக்கிறது.
சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த தீபாவின் மனு போதிய தகவல்கள் இல்லாததாலும், நடிகர் விஷால் மனு பல்வேறு திருப்பங்களுக்கு இடையேயும் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது தமிழக அரசியல் களத்திலும், சமூக வலைத்தளங்களிலும் இந்த விஷயம் தான் ஹாட் டாஃபிக் ஆக இருக்கிறது. இது குறித்து நிறைய சமூக மற்றும் நகைச்சுவைக் கருத்துப் பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது.
அதில் ஒரு பதிவில், விஷால் மற்றும் தீபாவின் வேட்புமனுக்கே இந்த நிலைமை என்றால், நடிகர் கமலஹாசன் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று கற்பனையாக ஒரு பதிவு பலராலும் பகிரப்பட்டு வருகிறது...
அதில் இடம்பெற்றுள்ளதாவது
பெயர்: எம்பெயர் எதுவாக இருப்பினும் அதையே இவ்விடம் பூர்த்தி செய்ய நான் எதற்கு? மை நிரப்பிய பேனா கொண்டு மொய் எழுத வந்தவனல்ல நான், மெய் எழுத வந்த முதல்வன், என நீரே எழுதிக்கொள்ளக்கடவது. நான் யாரென்பது உமக்கு தெரியும் என்பதை யாமறிவோம்.
சொத்துவிபரம்: ஆண்டோர் மற்றும் ஆள்போரின் கணக்கறியா சிறுவனுக்குத் தெரியாதா, நான் ஈன்ற சொத்து ஸ்ருதியும், அக்க்ஷராவும், எம் தமிழ் நற்பணி இயக்கச் சகாக்களும் தான் என் சொத்தென்று?
மதம்: நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர்.
இப்படியெல்லாம் இருந்தா, தேர்தல் அலுவலக ஊழியர்கள் ரத்தம் கக்கி செத்து போயிடுவானுங்க 😂 என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications