விஷால் , தீபாக்கே இப்படினா ”ஆண்டவர்” மனுதாக்கல் செய்தால்.... என்ன ஆகும்? கலகல பேஸ்புக் பதிவு
நடிகர் விஷால், தீபா வேட்புமனு நிராகரிப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video

சென்னை: ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால், தீபா ஆகியோரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது சமூக வலைத்தளங்கள் பேசு பொருள் ஆகி இருக்கிறது.
சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த தீபாவின் மனு போதிய தகவல்கள் இல்லாததாலும், நடிகர் விஷால் மனு பல்வேறு திருப்பங்களுக்கு இடையேயும் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது தமிழக அரசியல் களத்திலும், சமூக வலைத்தளங்களிலும் இந்த விஷயம் தான் ஹாட் டாஃபிக் ஆக இருக்கிறது. இது குறித்து நிறைய சமூக மற்றும் நகைச்சுவைக் கருத்துப் பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது.
அதில் ஒரு பதிவில், விஷால் மற்றும் தீபாவின் வேட்புமனுக்கே இந்த நிலைமை என்றால், நடிகர் கமலஹாசன் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று கற்பனையாக ஒரு பதிவு பலராலும் பகிரப்பட்டு வருகிறது...
அதில் இடம்பெற்றுள்ளதாவது
பெயர்: எம்பெயர் எதுவாக இருப்பினும் அதையே இவ்விடம் பூர்த்தி செய்ய நான் எதற்கு? மை நிரப்பிய பேனா கொண்டு மொய் எழுத வந்தவனல்ல நான், மெய் எழுத வந்த முதல்வன், என நீரே எழுதிக்கொள்ளக்கடவது. நான் யாரென்பது உமக்கு தெரியும் என்பதை யாமறிவோம்.
சொத்துவிபரம்: ஆண்டோர் மற்றும் ஆள்போரின் கணக்கறியா சிறுவனுக்குத் தெரியாதா, நான் ஈன்ற சொத்து ஸ்ருதியும், அக்க்ஷராவும், எம் தமிழ் நற்பணி இயக்கச் சகாக்களும் தான் என் சொத்தென்று?
மதம்: நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர்.
இப்படியெல்லாம் இருந்தா, தேர்தல் அலுவலக ஊழியர்கள் ரத்தம் கக்கி செத்து போயிடுவானுங்க 😂 என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications