முதல்வர், துணை முதல்வர் குறித்து துக்ளக் குருமூர்த்தி அதிரடி டிவீட்.. அதிமுகவினர் கொந்தளிப்பு
தமிழக முதல்வர், துணை முதல்வர் குறித்து துக்ளக் குருமூர்த்தி அநாகரீகமாக ட்விட்டரில் பதிவிட்டது அதிமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் குறித்து துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி அநாகரீகமாக ட்விட்டரில் விமர்சனம் செய்திருப்பது அதிமுகவினரை மிகக் கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் டெல்லிக்கும் அதிமுகவுக்கும் இடையே தூதராக செயல்பட்டு வருகிறார் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி என்பது நாடறிந்த உண்மை. அதிமுக அமைச்சர்களே துக்ளக் குருமூர்த்தி வீட்டுக்கு பகிரங்கமாக சென்று ஆலோசனை நடத்தினர்.
இதற்கு தினகரன் தரப்பு மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தோல்வியைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் அதிரடியாக நேற்று நீக்கப்பட்டனர்.

கொந்தளித்த அதிமுக
இச்செய்தியை தமது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் துக்ளக் குருமூர்த்தி, முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் குறித்து மிகவும் அநாகரீகமான வார்த்தைகளில் திடீரென விமர்சித்தும் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு அதிமுகவினரை மிகக் கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது.

கைது செய்ய வலியுறுத்தல்
துக்ளக் குருமூர்த்தியின் ட்விட்டர் பக்கத்திலேயே மிகக் கடுமையான விமர்சனங்களை அதிமுகவினர் பதிலுக்கு முன்வைத்து வருகின்றனர். முதல்வர், துணை முதல்வரை இழிவாக விமர்சித்த துக்ளக் குருமூர்த்தியை கைது செய்ய வேண்டும் எனவும் அதிமுகவினர் வலியுறுத்தியும் வருகின்றனர்.

இழிவாக விமர்சிப்பதா?
அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தமது பதிலில், வார்த்தைகளை கவனமாக பதிவிடுங்கள்.. மற்றவர்களை இழிவாக விமர்சிக்கும் நீங்கள் என்னதான் சாதித்துவிட்டீர்கள்? நோட்டாவை விட பாஜக ஏன் குறைவான வாக்குகள் பெற்றது என்பதை சொல்ல முடியுமா? என கொந்தளித்துள்ளார்.
|
கடும் கண்டனம்
அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ஹரி பிரபாகரன், முதல்வர், துணை முதல்வரை இழிவாக பேசிய குருமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என கொந்தளித்துள்ளார். மற்றொரு பதிவில் குருமூர்த்தி மிகவும் கடும் கண்டனத்தையும் ஹரி பிரபாகரன் பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications