மனவளர்ச்சி குன்றிய மகளுக்கு விஷம் கொடுத்த தம்பதி.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனம் வளர்ச்சி குன்றிய மகளுக்கு விஷம் கொடுத்த தந்தையிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீ வில்லிபுத்தூரை சேர்ந்தவர்கள் முனீஸ்வரன் மற்றும் ரேவதி தம்பதியினர். இவர்களுக்கு மனவளர்ச்சி குன்றிய சாதனா என்ற மகள் உள்ளார்.
இவர்கள் ஏதோ ஒரு பிரச்சினயால் வாழப் பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் நாகபாளையத்தில் உள்ள குலதெய்வமான காத்தப்பசாமி கோயிலுக்கு வந்தனர்.
[அரண்மனைக் கிளி... டிஆர்பிக்காக இப்படியெல்லாமா டயலாக் வைப்பீர்கள்?]
அப்போது தங்களது மகளுக்கு சாதனாவுக்கு மட்டும் விஷம் கொடுத்துள்ளனர். இதையடுத்து அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்கா மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதுகுறித்து சாதனாவின் தந்தை முனீஸ்வரனிடம் மல்லி காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தது ஏன் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.