கொடூர போலீஸ் தாக்குதல்.. அரசு மீது கோபத்தை திருப்பிய தமிழக மக்கள்.. களையிழந்த குடியரசு தினம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது போலீசார் கொடூரமாக தாக்குதல் நடத்தினார்கள். இதனால் தமிழகம் முழுவதும் குடியரசு தின விழா கூட்டம் இல்லாமல் களையிழந்து காணப்படுகிறது.
சென்னை; குடியரசு தினம் என்றால் மாவட்டந்தோறும் நடக்கும் கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வத்தோடு கண்டு களிப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு போலீசாரின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி இருப்பதால் குடியரசு தினம் களையிழந்து காணப்படுகிறது.
கடந்த திங்கள் கிழமை சென்னையில் நடைபெற்ற வன்முறையில் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள நடுகுப்பம், அயோத்திய குப்பம் மற்றும் ராயப்பேட்டை பகுதிகளில் வீடு வீடாக புகுந்து போலீசார் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இது போதாதென்று அவர்களே குடிசைகள் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தினார்கள்.

இந்நிலையில், போலீசாரின் தாக்குதலுக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள், குடியரசு தினத்திற்கு தங்கள் வீடுகளில் இருந்து ஒரு குழந்தை கூட போகாது என்று கோபத்தோடு கூறியிருந்தார்கள். அதற்கேற்ப யாரும் இன்று குடியரசு தின கலை விழா நிகழ்ச்சியை காண மெரினாவிற்கு செல்லவில்லை.
இதே போன்று, மதுரை, அலங்காநல்லூர், கோவை, ஈரோடு என பல இடங்களில் மாணவர்கள் மீது போலீசார் கடுமையான தாக்குதல் நடத்தினார்கள். இதனையடுத்து, மற்ற மாவட்டங்களிலும் பொதுமக்கள் குடியரசு தின விழாவை புறக்கணித்து வீட்டிலேயே உள்ளனர். போலீசார் காட்டிய கடுமையான கெடுபிடியும், வன்முறை சம்பவங்களும் மக்களை பெரும் அளவில் பாதிப்படைய செய்துள்ளன.

வன்முறை சம்பவம் நடந்து 2 நாட்களே ஆகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் கோபம் இன்னும் தீராமல் இருக்கிறது. போலீசாரின் வன்முறை தாக்குதலுக்கு பொதுமக்கள் இடத்திலும் கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது. எனவேதான், தமிழகம் முழுவதும் குடியரசு தின விழா களையிழந்து காணப்படுகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்!












Click it and Unblock the Notifications