2 பெண் குழந்தைகளை கொன்று வேலூரில் தந்தை தற்கொலை.. விசாரணையில் அம்பலமாகும் திடுக் தகவல்!
வேலூர் அருகே கடன் தொல்லையால் 2 பெண் குழந்தைகளை கொன்று தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்: வேலூர் அருகே கடன் தொல்லையால் 2 பெண் குழந்தைகளை கொன்று தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அடுத்த மேல்மொனவூர் ஈஸ்வரன் தெரு பகுதியை சேர்ந்த வெங்கடேசன். இவரது மனைவி கமலா. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 7 வயதுதில் 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்நிலையில் வெங்கடேசன் கடந்த சில மாதங்களாக போதுமான வருமானம் இன்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்.

அதிகரித்த கடன் தொல்லை
அதேநேரத்தில் குடும்பத்தை நடத்தவும் குழந்தைகளை காப்பாற்றவும் கடன் வாங்கி செலவு செய்துள்ளார். இதனால் கடன் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது.

குழந்தைகள் கொலை
இந்நிலையில் கடன் தொல்லை தாங்கமுடியாத நிலையில் தனது வீட்டிலேயே 2 பெண் குழந்தைகளையும் தூக்கிட்டு கொலை செய்துள்ளார் என கூறப்படுகிறது

தந்தையும் தற்கொலை
மேலும் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் - திடுக் தகவல்
வெங்கடேசன் தற்கொலைக்கு கடன் தொல்லையே காரணம் என கூறப்பட்ட நிலையில் செய்வதற்கு முன்பு, தான் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். போலீஸ் விசாரணையில் வெங்கடேசனுக்கும், மனைவி கமலாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.

மனைவியுடன் தகராறு
இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அத்துடன் கமலா வேலைக்குச் செல்வது வெங்கடேசனுக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிகிறது.

பெரும் சோகம்
இதனால் வெங்கடேசன் மனமுடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் வெங்கடேசன் தன்னுடைய இரு மகள்களையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, வீட்டில் கயிற்றால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய்












Click it and Unblock the Notifications