அட இப்படியும் விருந்து வைக்கலாமா?... இது தெரியாம போச்சே!!
ஒரு விழாவில் கணவன்- மனைவிக்கு ஒரே இலையில் பந்தி பரிமாறப்பட்டது. இதுதொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.
Recommended Video

சென்னை: எங்கோ நடைபெற்ற ஒரு விழாவில் தம்பதிக்கு ஒரு இலை என்ற அடிப்படையில் வித்தியாசமான முறையில் உணவு வழங்கப்பட்டது.
பொதுவாக எந்த விஷேசத்துக்கு சென்றாலும் பந்திக்கு முந்துவது என்பதுதான் பழமொழி. அங்கு வாழை இலையில் சூடாக பரிமாறப்படும் உணவு வகைகளை தனித்தனியாக சுவைப்பது வழக்கம்.
இதில் தனியாக சாப்பிட தெரிந்த சிறு குழந்தைக்கு இலை வைக்காவிட்டாலும் பெரிய பஞ்சாயத்தே நடந்துவிடும். சில நேரங்களில் குழந்தைகளும், வயதானவர்களும் சரியாக சாப்பிடாமல் அப்படியே வைத்து விடுவதால் உணவு வீணாகும்.

ஏழைகளுக்காவது கொடுக்கலாம்
இதுபோல் உணவு பொருள்களை வீணாக்குவதை விடுத்து மக்களும் விழா குழுவினருடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக இருக்கும் உணவுகளை இல்லாதோருக்கு கொடுக்க வேண்டும்.

திட்டிக் கொண்டே செல்வோர்
உணவு வீணாக்குவதால் அடுத்தடுத்து பந்திக்கு வருபவர்களுக்கு இலை கூட கிடைக்காது. இதனால் விழாவுக்கு வருவோர் உணவு இல்லாமல் அருகில் உள்ள ஹோட்டல்களில் சாப்பிட்டுவிட்டு செல்வதும் நடந்துள்ளது.

அசத்தல்
ஆனால் ஒரு விழாவில் உணவு சிக்கனம் தேவை இக்கனம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆம், ஜோடியாக வந்தவர்களுக்கு ஒரே ஒரு தலைவாழை இலையில் உணவு பரிமாறி அசத்தி உள்ளனர்.

பங்கு போடுவதா
இது போன்ற திருமணங்களுக்கு ஜோடியாகத்தான் போக வேண்டும் போல. சிங்கிளாக போனால் பஸ், ரயில், விமான இருக்கை போல் இலையையும் பங்கு போட்டு கொள்ள வேண்டுமோ என்னவோ.












Click it and Unblock the Notifications