நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன்.. 2 குழந்தைகளுடன் தீக்குளித்து உயிரைவிட்ட தாய்..தென்காசியில் பயங்கரம்
கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனமுடைந்த மனைவி 2 குழந்தைகளுடன்ன தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி: கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனமுடைந்த மனைவி 2 குழந்தைகளுடன்ன தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி அருகே உள்ள இலஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது கணவர் ரவி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகும் நிலையில் 9 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் மகேஸ்வரியின் கணவர், அவரது நடத்தையில் சந்தேகமடைந்து அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நாளுக்கு நாள் அவரது சந்தேகம் அதிகரிக்கவே மகேஸ்வரி மன உளைச்சலில் இருந்துள்ளார்.

தற்கொலை செய்ய முடிவு
இந்நிலையில் நேற்றும் மகேஸ்வரி மீது சந்தேகமடைந்த அவரது கணவர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மகேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

குழந்தைகளுடன் தீக்குளிப்பு
அதன்படி இன்று காலை தனது கணவர் வெளியே சென்றதும் 9 வயது சிறுவன் விஷ்வா, மற்றும் 4 வயது குழந்தை தனுஸ்ரீ ஆகியோருடன் மகேஸ்வரி தீக்குளித்தார். இதில் 3 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

கரிக்கட்டைகளாக கிடந்தனர்
வீட்டிலிருந்து அலறல் சத்தத்துடன் புகை வருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது மகேஸ்வரி தனது 2 மகன்களுடன் கரிக்கட்டையாக கிடந்தார்.

கணவரிடம் விசாரணை
இதனைக்கண்ட அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கணவர் ரவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரின் சந்தேகபுத்தியால் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அரிதர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications