நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன்.. 2 குழந்தைகளுடன் தீக்குளித்து உயிரைவிட்ட தாய்..தென்காசியில் பயங்கரம்
கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனமுடைந்த மனைவி 2 குழந்தைகளுடன்ன தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி: கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனமுடைந்த மனைவி 2 குழந்தைகளுடன்ன தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி அருகே உள்ள இலஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது கணவர் ரவி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகும் நிலையில் 9 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் மகேஸ்வரியின் கணவர், அவரது நடத்தையில் சந்தேகமடைந்து அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நாளுக்கு நாள் அவரது சந்தேகம் அதிகரிக்கவே மகேஸ்வரி மன உளைச்சலில் இருந்துள்ளார்.
தற்கொலை செய்ய முடிவு
இந்நிலையில் நேற்றும் மகேஸ்வரி மீது சந்தேகமடைந்த அவரது கணவர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மகேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
குழந்தைகளுடன் தீக்குளிப்பு
அதன்படி இன்று காலை தனது கணவர் வெளியே சென்றதும் 9 வயது சிறுவன் விஷ்வா, மற்றும் 4 வயது குழந்தை தனுஸ்ரீ ஆகியோருடன் மகேஸ்வரி தீக்குளித்தார். இதில் 3 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
கரிக்கட்டைகளாக கிடந்தனர்
வீட்டிலிருந்து அலறல் சத்தத்துடன் புகை வருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது மகேஸ்வரி தனது 2 மகன்களுடன் கரிக்கட்டையாக கிடந்தார்.
கணவரிடம் விசாரணை
இதனைக்கண்ட அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கணவர் ரவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரின் சந்தேகபுத்தியால் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அரிதர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.