கள்ளக் காதலனுக்கு திருமணமா?... விஷ ஊசி போட்டு இரு குழந்தைகளுடன் பெண் தற்கொலை
கள்ளக்காதலனுக்கு திருமணம் என்ற தகவலறிந்த ஈரோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
Recommended Video

ஈரோடு: கள்ளக்காதலனுக்கு இன்னொரு பெண்ணுடன் திருமணம் என்ற தகவல் அறிந்த ஈரோடு பெண் விரக்தியடைந்து தனது இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்துக் கொண்டார்.
ஈரோட்டில் உள்ள சம்பத் நகரை சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் 3-ஆம் வகுப்பு படித்து வந்தார். இரண்டாவது மகனுக்கு 4 வயதாகிறது.
இந்நிலையில் ஸ்ரீஜா வீராம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரிசப்ஷனிஸ்டாக பணிபுரிந்து வந்தார். இவருடன் பணிபுரிந்த ரஞ்சித் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.

தனிமையில் சந்திப்பு
நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. தனிமையில் சந்தித்து இருவரும் காதலை வளர்த்த நிலையில் ரஞ்சித்தின் வீட்டில் திருமணத்துக்கு பெண் பார்த்து கொண்டிருந்தனர்.

வாக்குவாதம்
இதற்கு ரஞ்சித்துக்கும் உடன்பாடு இருந்ததாம். இதை அறிந்த ஸ்ரீஜா, ரஞ்சித்துடன் வாக்குவாதம் செய்துள்ளார். எனினும் அவர் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

குழந்தைகளுக்கு விஷ ஊசி
இதனால் ஸ்ரீஜா மனமுடைந்தார். ரஞ்சித் தன்னை ஏமாற்றிவிட்டதாக கருதிய ஸ்ரீஜா, தனது இரு மகன்களுக்கும் விஷ ஊசி போட்டுள்ளார். அவர்கள் இருவரும் இறந்ததை உறுதி செய்து கொண்ட ஸ்ரீஜா இதுகுறித்து கடிதம் எழுதிவைத்து விட்டு தானும் விஷ ஊசி போட்டுக் கொண்டு உயிரிழந்துவிட்டார்.

தற்கொலை கடிதம்
தகவலறிந்த போலீஸார் மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீஜா எழுதிய தற்கொலை கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications