Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஸ் டிக்கெட்: கூடுதல் கட்டணம் கேட்ட கண்டக்டர் மீது கத்தியை வீசிய பயணி!

புதிய கட்டணம் கேட்டதால் தருமபுரியில் பேருந்தில் ஒன்றில் பிரச்சனை உருவாகி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: புதிய கட்டணம் கேட்டதால் தருமபுரியில் பேருந்து நடத்துனருக்கும், பயணிக்கும் இடையில் பிரச்சனை உருவாகி இருக்கிறது. இதனால் பேருந்தில் இருந்த அந்த பயணி நடத்துனர் மீது கத்தியை தூக்கி வீசி இருக்கிறார்.

தருமபுரியில் இருக்கும் தொட்டம்பட்டி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அங்கு சென்ற பேருந்தில் மாத்தூர் என்ற இடத்தில் வெற்றிவேல் மற்றும் வேலன் ஆகியோர் ஏறியுள்ளனர்.

A Man throws knife at conductor for asking bus fare

அவர்களிடம் நடத்துனர் டிக்கெட்டிற்கு பணம் கேட்டு இருக்கிறார். இவர்கள் எப்போதும் கொடுக்கும் பணத்தையே கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் நடத்துனர் புதிய கட்டண விவரத்தை கூறி கூடுதல் பணம் கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் இருவரும் கூடுதல் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் இவர்களுக்கும் நடத்துனருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. உடனே வேலன் தன் பையில் இருந்த கத்தியை எடுத்து வீசி இருக்கிறார். கத்தி நேராக நடத்துனரை நோக்கி சென்று இருக்கிறது.

ஆனால் நடத்துனர் சாமர்த்தியமாக விலகி தப்பினார். வேலன் உடனே ஜன்னல் வழியாக குதித்து ஓடினார். ஆனால் மக்கள் வெற்றிவேலை பிடித்துவிட்டனர்.

வெற்றிவேல் போச்சம்பள்ளி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் இவர் மீது எந்த தவறும் இல்லை என்று கூறி புகார் இல்லாமல் விடுவிக்கப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+