4வதும் பெண் குழந்தையா? வீட்டிலேயே கருக்கலைப்பு செய்த செவிலியர்.. 7 மாத கர்ப்பிணி பலி
மதுரை அருகே 4வதும் பெண் குழந்தையாக இருக்கும் என்ற சந்தேகத்தில் கருக்கலைப்பு செய்த 7 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்தார்.
Recommended Video

மதுரை: உசிலம்பட்டி அருகே 4வதும் பெண் குழந்தையாக இருக்கும் என்ற சந்தேகத்தில் கருக்கலைப்பு செய்த 7 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் உசிலம்பட்டி தனியார் மருத்துவமனையில் வேலை பார்ப்பவர் பாண்டி என்பவரின் மனைவி லட்சுமி.
38 வயதான இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியாக பணிபுரிந்து வருகிறார். உத்தப்புரத்தை சேர்ந்த ராமர் என்பவரின் மனைவி ராமுத்தாய். இந்த தம்பதிக்கு ஏற்கனவே அழகு சித்ரா (9) பிரவினா (6) லட்சுமி (3) என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

பெண் குழந்தை என சந்தேகம்
இந்நிலையில் ராமுத்தாய் 4வது முறையாக கர்ப்பம் தரித்தார். 7 மாத கர்ப்பிணி 4 வது குழந்தையும் பெண் குழந்தையாக இருக்கும் என சந்தேகமடைந்தார்.

வீட்டிலேயே கருக்கலைப்பு
இதையடுத்து கருக்கலைப்பு செய்ய திட்டமிட்ட ராமுத்தாய், கர்ப்பத்தை கலைக்க செவிலியர் லட்சுமியிடம் சிகிச்சை பெற்று வந்தார். கர்ப்பிணி பெண் ராமுத்தாய்க்கு இன்று காலை செவிலியர் லட்சுமி தனது வீட்டிலேயே கருக்கலைப்பு செய்தார்.

கர்ப்பிணி பலி
அப்போது எதிர்பாராதவிதமாக மூச்சுதிணறல் ஏற்பட்டு ராமுத்தாய் உயிரிழந்தார். சம்பவத்தை அறிந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செவிலியர் கைது
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உசிலம்பட்டி போலீசார் செவிலியர் லட்சுமியை கைது செய்தனர். கருக்கலைப்பு செய்த 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications