மதுரையில் கடன் தொல்லை காரணமாக 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை
மதுரையில் கடன் தொல்லை காரணமாக 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
மதுரை: கடன் தொல்லை காரணமாக 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி பிரியா. இவருக்கு வயது 38.

இந்த தம்பதிக்கு முருகேஸ்வரி, விஜயகணேஷ் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் மூன்று பேரும் இன்று வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர்.
தாய் பிரியா தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லை காரணமாக பிரியா தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஊரணிக்கரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications