கணவர் தற்கொலை என வந்த தகவலால் ஷாக்.. 13 மாத குழந்தையை கொன்று மனைவி தற்கொலை!
வேலூர் அருகே கணவர் தற்கொலை செய்து கொண்டதாக வந்த தகவலையடுத்து 13 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்: கணவர் தற்கொலை செய்து கொண்டதாக வந்த தகவலையடுத்து 13 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த செங்குட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ரெக்ஸ் - கிறிஸ்டியானா தம்பதி. இவர்களுக்கு 13 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் கணவர் ரெக்ஸ் தற்கொலை செய்து கொண்டதாக மனைவி கிறிஸ்டியானாவுக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது 13 மாத குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தாய் மற்றும் வந்த குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணவர் ரெக்ஸ் தற்கொலை செய்து கொண்டது உண்மைதானா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications