நாகையில் மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி.. கிராம மக்கள் சோகம்
நாகையில் மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை: மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஜந்தா. இவருக்கு ஹரிசங்கரன் என்ற 13 வயது மகனும், வசந்த குமார் என்ற 11 வயது மகனும் உள்ளனர்.
இந்நிலையில் தாய் அஜந்தா தனது இரண்டு மகன்களுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்தார். தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.
நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது இரண்டு மகன்களும் சடலமாக கிடந்துள்ளனர்.
அஜந்தா உயிருக்கு போராடி வந்துள்ளார். இதையடுத்து போலீஸ்க்கு தகவல் தெரிவித்த அப்பகுதி மக்கள் ஆபத்தான நிலையில் இருந்த அஜந்தாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அஜந்தா குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன என விசாரித்து வருகின்றனர். மேலும் கடன் தொல்லை காரணமாக அவர் மகன்களை கொன்று தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.