திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை.. கணவன், மாமியார் அதிரடி கைது!
புதுச்சேரியில் திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியில் திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதுச்சேரி, மூலக்குளம் என்.எஸ். போஸ் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரன், இவர் ஜிப்மர் மருத்துவமனையில் தினக்கூலி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே பி.காம்., மூன்றாமாண்டு மாணவியான புவனேஸ்வரி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கடந்த சில நாட்களாக, புதுமணத் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 21ம் தேதி இரவு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் புவனேஸ்வரி.
பின்னர் உறவினர்கள் சமாதானம் கூறி, மீண்டும் கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மறுநாள் காலை திடீரென புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் புவனேஸ்வரியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறினர்.
இதனையடுத்து புவனேஸ்வரி கொலை செய்யபட்டார் என புவனேஸ்வரியின் உறவினர்கள் புகார் தெரிவித்த நிலையில், போலீசார் புவனேஸ்வரியின் கணவர் லோகேஸ்வரன் மற்றும் மாமியார் கஸ்தூரி ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்து, கைது செய்தனர். பின்பு இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications