மெர்சலாக்கிய மெர்சல் பட டிக்கெட்டுகள்.. சமூக வலைதளங்களில் பர பர
மெர்சல் படத்தின் டிக்கெட் அதிகமாக விற்பனை செய்வதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவின.
Recommended Video
சென்னை: மெர்சல் படத்தின் டிக்கெட் ரூ.1200-க்கு விற்பனை செய்யப்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த டிக்கெட் இலங்கையில் உள்ள ஒரு தியேட்டரில் விற்பனை செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
நடிகர் விஜய் 3 வேடங்களில் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் தீபாவளி அன்று திரையிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கட்டணக் கொள்ளையை தடுக்க டிக்கெட் விலையை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் மெர்சல் டிக்கெட் ரூ.1200-க்கு விற்பனஐ செய்யப்படுவதாக புகைப்படங்கள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தமிழக அரசின் விதியை தியேட்டர் நிர்வாகம் மீறிவிட்டதாகவும் பொங்கி எழுந்தனர்.
ஆனால் விசாரணையில் அந்த டிக்கெட் இலங்கையில் உள்ள ஒரு தியேட்டரில் விற்கப்பட்டது என தற்போது தெரியவந்துள்ளது. அதில் ரூ.1200 என குறிப்பிடப்பட்டுள்ளது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.600 ஆகும்.
இலங்கையில் மலிகாவட்டாவில் உள்ள ரூபி தியேட்டரில்தான் இந்த டிக்கெட் அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது என்பதை அறிந்த தமிழக ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.