For Daily Alerts
Just In
பிளஸ் 2 முடிவுகள் சோகம் – மதிப்பெண் குறைவு- தீக்குளித்த திருச்சி மாணவி
திருச்சி: திருச்சியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர், தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தீக்குளித்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாளைத்தைச் சேர்ந்தவர் மாணவி சித்ரா தேவி.இவர் இந்த வருடம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை எழுதி இருந்தார்.
இந்நிலையில் தேர்வின் முடிவுகள் இன்று வெளியான நிலையில்,மாணவி சித்ரா 639 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தார்.
ஆனால், எதிர்பார்த்த மதிப்பெண்களை விட குறைவான மதிபெண்களே பெற்றதால் மனமுடைந்த சித்ரா தேவி, உடலில் கெரசின் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
ஆபத்தான நிலையில் காப்பாற்றப்பட்ட மாணவி சித்ரா தேவி, தற்போது திருச்சி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.
Comments
English summary
A student from Trichy fired herself because of low marks in Plus 2 examination. She is admitted in Trichy GH.
Story first published: Friday, May 9, 2014, 12:43 [IST]