பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைவு.. 4வது மாடியில் இருந்து குதித்து கோவையில் மாணவி தற்கொலை முயற்சி!
பிளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்ததால் கோவையில் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: பிளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்ததால் கோவையில் மாணவி ஒருவர் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 1-ந் தேதி துவங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது. இதில் தனித்தேர்வர்கள் உட்பட 9 லட்சத்து ஏழாயிரத்து 620 பேர் தேர்வெழுதியிருந்தனர்.
விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in. என்ற இணையதள முகவரிகளில் இன்று வெளியானது.
இதில் 91.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் கோவையில் ப்ரியா என்ற மாணவி ப்ளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் தற்கொலைக்கு முயன்றார்.
யாரும் எதிர்பாராத நேரத்தில் 4-வது மாடியிலிருந்து குதித்து அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பிரியாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.