பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைவு.. 4வது மாடியில் இருந்து குதித்து கோவையில் மாணவி தற்கொலை முயற்சி!
பிளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்ததால் கோவையில் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: பிளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்ததால் கோவையில் மாணவி ஒருவர் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 1-ந் தேதி துவங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது. இதில் தனித்தேர்வர்கள் உட்பட 9 லட்சத்து ஏழாயிரத்து 620 பேர் தேர்வெழுதியிருந்தனர்.

விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in. என்ற இணையதள முகவரிகளில் இன்று வெளியானது.
இதில் 91.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் கோவையில் ப்ரியா என்ற மாணவி ப்ளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் தற்கொலைக்கு முயன்றார்.
யாரும் எதிர்பாராத நேரத்தில் 4-வது மாடியிலிருந்து குதித்து அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பிரியாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications